http://i50.tinypic.com/29mlkww.jpg

சச்சினுக்கு ஆதரவாக பாஜக!

11/18/09


"சச்சின் கூறியது சரி; அவர் ஒரு தேசிய விளையாட்டு வீரர் என்பதைப் பால்தாக்கரே மறந்து விடக்கூடாது" என கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு ஆதரவாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு 20 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த சச்சின், "நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ஆனால் முதலில் நான் இந்தியன். மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது" என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, "மராத்தியர்களின் மனம் என்னும் பிட்சில் சச்சின் ரன் அவுட் ஆகிவிட்டார்" என்றும் "அவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்; அரசியல் விளையாட்டில் அவர் ஈடுபடுவது சரியல்ல" என்று பால்தாக்கரே தனது இதழான சாம்னா தலையங்கத்தில் கடுமையாக சச்சினைச் சாடி எழுதியிருந்தார். இது அரசியல் தலைவர்களிடையே பெருத்த எதிர்ப்பைப் பால்தாக்கரேக்குப் பெற்றுத்தந்தது. பிரிவினை பேச்சுகள் மூலம் தேசத்தைத் துண்டாட முயல்வதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், இந்திய மக்களின் அபிமான நட்சத்திர வீரரான சச்சின் மீதான அவரின் விமர்சனம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று(திங்கள் கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, "சச்சின் கூறியது முழுக்க சரியான கருத்து; அவர் ஒரு தேசிய விளையாட்டு வீரர் என்பதைப் பால் தாக்கரே மறந்து விடக்கூடாது" என பால்தாக்கரேக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

0 comments

Post a Comment