
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது, வியாழனன்று அவரது மாதிரி பரிசோதனைக்கு அனுப்பபட்டு இருந்தது சோதனையின் முடிவில் அவ்ருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளதாக நேற்று காலை குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே அவருடன் மாஸ்கோ சென்ற பெரும் தொழிலதிபர்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து குஜராத் மந்திரி சபையில் கடந்த வியாழனன்று முதல்வர் மோடியுடன் மூன்று மணி நேர அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி ஒரு அமைச்சர் கூறும்போது மோடிக்கு பன்றிக்காய்ச்சல் என்ற சந்தேகமான நிலையில் அவர் இந்த அமைச்சரவை கூட்டத்தை நடத்தி இருக்ககூடாது பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்திருக்க வேண்டும் என்றார்.எனினும் குஜராத் அரசு இதை இன்னும் உறுதிபடுத்த மறுத்துவிட்டது முதல் சோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் நேற்று மாலை மீண்டும் மற்றொரு மாதிரி சோதனக்கு அனுப்பப்பட்டுள்ளது இந்நிலையில் மோடி அரசு ஏற்கனவே மோடிக்கு பன்றிக்காய்ச்சல் தாக்குதலை மறைப்பதற்காக அந்த மாதிரியை ரமேஷ் என்பவரின் பெயரில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
source:inneram
மோடிக்கு பன்றிக்காய்ச்சல்! பீதியில் தொழிலதிபர்கள்
11/3/09
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment