திண்டுக்கல் : தமிழகத்தில் இன்றும் நீடித்து வரும் தீண்டாமையின் அடையாளமாய் திண்டுக்கல்லில் ஒரு தலித் வாலிபர் சாதி கிறிஸ்துவர்கள் வசிக்கும் தெருவில் காலணிகள் அணிந்து நடந்து வந்ததற்காக மலம் உண்ண நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மெய்கோவில்பட்டியில் உள்ள இந்திரா நகரில் வசிக்கும் சடையாண்டி எனும் தலித் வாலிபர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் “ உயர் சாதி கிறிஸ்துவர்கள் வசிக்கும் தெருவில் ஜனவரி 7 அன்று காலணி அணிந்து சென்றதற்காக என்னை அடித்து துன்புறுத்திய சாதி கிறிஸ்துவர்கள் கொடுமையின் உச்சகட்டமாக என்னை மலம் உண்ண நிர்ப்பந்தித்தனர்” என்று புகார் அளித்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி கிறிஸ்துவர்களால் மலம் உண்ண நிர்ப்பந்திக்கப்பட்ட தலித் : திண்டுக்கல்லில் கொடூரம்
1/14/10
Labels:
tamil nadu news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment