
புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த லிபரான் கமிஷன் நீண்ட காலத்துக்கு பின் பாஜக தலைவர்கள் 68 பேர் குற்றம் சாட்டியது. ஆனால் நரசிம்மராவின் பெயர் இப்பட்டியலில் இல்லாதது பலத்த விமர்ச்னத்துக்குள்ளானது. இச்சூழலில் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதற்கு பின்னர் அவ்விடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் திட்டங்கள் தீட்டினார் என பிரதமர் அலுவலகத்தில் துணைச்செயலாளராகவும் நரசிம்மராவின் ஆலோசகராகவும்(தகவல் ஆலோசகர்) பணியாற்றிய ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.ஆர்.கே பிரசாத் குறிப்பிட்டார்.
”உண்மையில் என்ன நிகழ்ந்தது” (அசலு எமி ஜரிகின்டன்டே?)என்று பெயரிடப்பட்ட தெலுங்கு மொழியிலான இப்புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது..ராமர்கோவில் கட்டுவதற்கான நரசிம்மராவின் விருப்பத்தைக்குறித்து இப்புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்களில் பிரசாத் எழுதியுள்ளார்.1992 டிசம்பர் 6 க்குப்பிறகு இரண்டு வருடத்தில் தனது லட்சியத்தைப் பூர்த்திச்செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார்.அதற்காக அரசியல் சார்பற்ற ட்ரஸ்ட் ஒன்றையும் துவக்கினார்.ஆனால் தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால் ராமர்கோவில் கட்ட இயலவில்லை.நரசிம்மராவ் மீண்டும் பிரதமராக பதவியேற்றிருந்தால் ராமர்கோவிலை கட்டியிருப்பார்,
மேலும் இந்நூலில் பிரசாத் 1993 ஆம் ஆண்டு நான்கு வட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபொழுது நரசிம்மராவ் தன்னோடு உரையாடிய உரையாடலின் விபரங்களையும் நினைவுக்கூறுகிறார்.அந்த தேர்தலில் பா.ஜ.க வின் முக்கிய பிரச்சாரமே ராமர்கோவில் கட்டுவதைப்பற்றிதான்.இந்நிலையில் ராவ் கூறினார்,”ராமனின் காப்புரிமையை பா.ஜ.க எவ்வாறு உரிமைக்கொண்டாட இயலும்?”பா.ஜ.க வுடன் நாம் போட்டியிடலாம்.ஆனால் ராமனோடு எவ்வாறு போட்டியிட இயலும்? என்ற நரசிம்மராவின் வார்த்தைகளை இந்நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நரசிம்மராவ் முயற்சித்தார் : திடுக் தகவல்
1/14/10
Labels:
India news.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment